Saturday, August 19, 2006

யாழில் ஒரு வாரக் காலமாக நடைபெற்ற சண்டையில் 88 புலிகள் பலி

யாழ் குடாப் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மோதல்கள் காரணமாக 88 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையின் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவத் தரப்பில் 485 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படகு கட்டும் துறைதான் பாதிக்கப்பட்டது என்றும் இலங்கை இராணுவத்தினர் கூறுவது போல புலிகளின் படகுகள் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்குடாப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வது குறித்து செஞ்சிலுவை சங்கம் வைத்துள்ள திட்டத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் இளந்திரையன் தெரிவித்தார்.

0 comments: